Posts

Showing posts from April, 2021

4. தொடர்ந்துக் கற்றல்

4. தொடர்ந்துக் கற்றல் ( சுயத்தைப் பற்றியும் , புதிய காரியங்களையும் உலகத்தைப் பற்றிய தகவல்களையும் அறிய) 1. சுயத்தை அறிதல் இயற்கையில் சிறந்தவர்கள்: உயிரினங்களில் மனிதன் மிகவும் தனித்துவமானவன் , பூமியின் முகத்தில் மற்ற எல்லா உயிருள்ள உயிரற்ற காரியங்களைவிட மனிதன் உயர்ந்தவன். மனிதன் நிறைய சாதனைகளைப் புரிந்து , பல புதிய விஷயங்களைச் செய்துள்ளான். அறிவார்ந்த ஆற்றலும் , விஷயங்களைக் கண்டறிந்து கட்டமைக்கும் திறனும் மனிதனின் சிறப்பு. மனிதர்கள் செய்யும் விஷயங்கள் , சுற்றுச்சூழலை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பெருமளவில் பாதிக்கின்றன. உறுதியாக மனிதன் தான் பூமியின் முகத்தில் உள்ள அனைத்து காரியங்களுக்கும் உயிரினங்களுக்கும் பொறுப்பானவன். அணுகுமுறையில் வேறுபாடுகள்: மனிதனின் ஆற்றல் மிகவும் சிறந்தது , ஆனால் உடல் வலிமையுடன் அறிவு மற்றும் உணர்வுகளின் பயன்பாடு பரவலாக வேறுபடுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் திறனை ஆக்கபூர்வமாகவும் பொது நலனுக்காகவும் பயன்படுத்துவதில்லை. சிலர் தங்களையும் தங்கள் சூழலையும் கட்டியெழுப்புவதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் , மற்றவர்களைக் குறித்து கவனம் செலுத்துவதில்லை , இது அதிக அழ...